செய்திகள்
நடுரோட்டில் நின்று மிரட்டிய யானை.

கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் வாகனங்களை வழிமறித்த ஒற்றை காட்டு யானை

Published On 2021-08-22 09:12 GMT   |   Update On 2021-08-22 09:12 GMT
மேட்டுப்பாளையம் செல்லும் சாலையின் குறுக்கே தட்டபள்ளம் அருகே வளைவில் ஒரு காட்டு யானை ஒன்று சாலை வழியாக வந்தது.

ஊட்டி:

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மலைப்பகுதியில் இருந்து சமவெளி பகுதிகளுக்கு செல்லும் பிரதான சாலையாக கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலை உள்ளது. தற்போது குஞ்சப்பனை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பலாப்பழம் அதிக அளவில் விளைந்துள்ளது. இதனால் பலா பழங்களை சாப்பிடுவதற்காக அந்த பகுதியில் தொடர்ந்து காட்டு யானைகள் முகாமிட்டு வருகின்றன. இதனால் அந்த பகுதிகளில் யானைகள் நடமாட்டம் தற்போது அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், குஞ்சப்பனையில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையின் குறுக்கே தட்டபள்ளம் அருகே வளைவில் ஒரு காட்டு யானை ஒன்று சாலை வழியாக வந்தது. இந்த யானையை கண்டு அந்த வழியாக வந்த சில வாகன ஓட்டிகள் தேவையில்லாமல் வாகனத்தில் உள்ள ஹாரனை ஒலிக்க விட்டதால், அந்த யானை சாலையை வழிமறித்து நின்று விட்டது. கோத்தகிரிக்கு செல்லும் பிரதான சாலை என்பதால் வாகனங்கள் வந்த வண்ணம் இருந்தன.

இதனால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் நெடுந்தூரத்துக்கு வரிசையாக அணிவகுத்து நின்றன. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக யானை அசையாமல் அப்படியே நின்று விட்டது. அதன் பின்னர் வாகனங்களுக்கு வழி விட்டு சாலையில் இருந்து, யானை அருகில் உள்ள வனப்பகுதிக்கு சென்றது. இதையடுத்து வாகனங்கள் சிறிது சீராக அங்கிருந்து சென்றன. அடிக்கடி யானைகள் சாலைக்கு வருவதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும் என்றும் யானையை தொந்தரவு செய்ய கூடாது எனவும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News