செய்திகள்
கைது

ராமநத்தம் அருகே மணல் கடத்தியவர் கைது

Published On 2021-08-20 18:39 IST   |   Update On 2021-08-20 18:39:00 IST
ராமநத்தம் அருகே மணல் கடத்தியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநத்தம்:

ராமநத்தம் அடுத்துள்ள கொரக்கவாடி பகுதியில் ராமநத்தம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வெள்ளாற்றில் இருந்து மோட்டார் சைக்கிளில் சாக்கு மூட்டையில் மணல் கடத்தி வந்ததாக, பெரம்பலூர் மாவட்டம் வெல்லுவாடி கிராமத்தைச் சேர்ந்த ராஜரத்தினம் மகன் வேல்முருகன் (வயது 28) என்பவரை கைது செய்து, அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிள் மற்றும் மணல் மூட்டையையும் பறிமுதல் செய்தனர்.

Similar News