செய்திகள்
வங்கி லாக்கர்

வங்கியில் லாக்கர் வைத்திருக்கும் வாடிக்கையாளர்களே உஷார்...

Published On 2021-08-19 06:50 GMT   |   Update On 2021-08-19 07:57 GMT
வங்கி லாக்கருக்கான புதிய விதிமுறைகள் 2022ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் அமலுக்கு வருகிறது.
வங்கி லாக்கருக்கான புதிய விதிமுறைகள் குறித்து  இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

* வங்கி லாக்கருக்கு உரிய பாதுகாப்பு பெட்டக வாடகை செலுத்தத் தவறினால் அந்த லாக்கரை உடைக்க வங்கிகளுக்கு அதிகாரம் உண்டு.

* அதேபோல் வங்கி லாக்கர் விஷயத்தில் வங்கி ஊழியர்கள் மோசடியில் ஈடுபட்டால் ஓர் ஆண்டு வாடகை போல் 100 மடங்கு இழப்பீடு தொகை வாடிக்கையாளருக்கு வழங்கப்படும்.


* வங்கியில் தீ விபத்து அல்லது இடிந்து விழுந்து சேதம் அடைந்தாலும் இந்த இழப்பீட்டை பெறலாம்.

* புயல், வெள்ளம், மின்னல், இடி, நிலநடுக்கம் போன்ற இயற்கை சீற்றத்தினால் வங்கி லாக்கர் மற்றும் லாக்கரில் உள்ள பொருட்கள் சேதம் அடைந்தால் வங்கி பொறுப்பு ஏற்காது.

* வங்கி லாக்கரில் சட்டத்திற்குப் புறம்பான பொருட்கள் மற்றும் அபாயகரமான பொருட்களை வைக்கக்கூடாது, மீறி வைத்தால் வாடிக்கையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேற்கண்ட புதிய விதிமுறைகள் 2022ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் அமலுக்கு வருகிறது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags:    

Similar News