செய்திகள்
அதிமுக

சென்னை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. புதிய நிர்வாகிகள் நியமனம்

Published On 2021-08-19 06:21 GMT   |   Update On 2021-08-19 06:21 GMT
ஆலந்தூர் கிழக்கு பகுதி செயலாளராக வி.பரணி பிரசாத், ஆலந்தூர் மேற்கு பகுதி பொருளாளராக எம்.ஏழுமலை ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை:

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை புறநகர் மாவட்டத்தின் மாவட்ட, ஒன்றிய, பகுதி, வட்ட புதிய நிர்வாகிகளாக கீழ்கண்டவர்கள் கீழ்காணும் பொறுப்புகளுக்கு இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள். சென்னை புறநகர் மாவட்ட பொருளாளராக லியோ என்.சுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர்களாக தே.கண்ணன், டி.சிவலிங்கம், பா.ஏழுமலை, டி.ஞானசேகரன், பி.பக்கிரிநாதன், கே.ராமச்சந்திரன் ஆகியோரும், அம்மா பேரவை இணை செயலாளர்களாக ஏ.முஸ்தபா, எஸ்.ராமச்சந்திரன் ஆகியோரும் எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாவட்ட இணை செயலாளர்களாக என்.கங்காதரன், டி.அருண் ஆகியோரும், மகளிர் அணி இணை செயலாளராக லட்சுமி டாணியேல், மாணவர் அணி துணை செயலாளராக எம். தயாளன் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை புறநகர் மாவட்ட அண்ணா தொழிற் சங்க துணைத்தலைவராக டி.வீரப்பன், வழக்கறிஞர் பிரிவு தலைவராக ஜெ.ப்ரெஷ்நேவ், மாவட்ட செயலாளராக எம்.மணிமாறன், சிறுபான்மையினர் நலப்பிரிவு துணை செயலாளராக சாகீர் உசேன், மீனவர் பிரிவு துணைத் தலைவராக என்.செல்வழகன், இணை செயலாளராக எஸ்.சந்திரசேகர், அமைப்பு சாரா ஓட்டுனர்கள் அணி இணை செயலாளராக ஆர். வெங்கட ரமணன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை புறநகர் மாவட்ட இளைஞர் பாசறை, இளம்பெண் பாசறை இணை செயலாளராக எஸ்.ராஜ் குமார், தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளராக எஸ்.இந்திராணி, வர்த்தக அணி இணை செயலாளராக ஆர்.கணேச மூர்த்தி, பொதுக்குழு உறுப்பினராக எஸ்.வரதராஜன் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சோழிங்கநல்லூர் கிழக்கு பகுதி செயலாளராக எம்.கே. பழனிவேல், சோழிங்கநல்லூர் மேற்கு பகுதி செயலாளராக ஜி.துரைசிங்கம், அம்மா பேரவை பகுதி செயலாளராக ஜி.என்.காமேஷ், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி பகுதி செயலாளராக ஜே.சுரேஷ் குமார், மகளிரணி தலைவராக எம்.செல்வமணி, மாணவர் அணி பகுதி செயலாளராக எஸ்.இளஞ்செழியன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சோழிங்கநல்லூர் வடக்கு பகுதி எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளராக கே.தயாளன், அம்மா பேரவை இணை செயலாளர்களாக ஆர்.புருஷோத்தமன், கே.முருகன், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணை செயலாளர்களாக சி.என். பாலகுமார், வி.ஏ.பாஸ்கர், எஸ்.ராகுல், மகளிர் அணி இணை செயலாளராக வி.ஐஸ்வர்யா நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஆலந்தூர் கிழக்கு பகுதி செயலாளராக வி.பரணி பிரசாத், ஆலந்தூர் மேற்கு பகுதி பொருளாளராக எம்.ஏழுமலை ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பரங்கிமலை கிழக்கு ஒன்றிய துணை செயலாளராக என்.பிந்து, அம்மா பேரவை ஒன்றிய தலைவராக எஸ்.ராமு ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். குன்றத்தூர் கிழக்கு ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளராக எஸ்.விநாயக மூர்த்தி, அம்மா பேரவை இணை செயலாளராக வி. கோட்டீஸ்வரன், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணை செயலாளராக ஆர்.சிவா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சோழிங்கநல்லூர் தெற்கு பகுதி வட்ட செயலாளர்களாக பி.ரஞ்சித்குமார், எம்.டில்லிபாபு, தா.ராமதாஸ், ஜே.விஜயகுமார். பி.சிவப்பிரகாசம், சி.ஜெயகோபால் ஆகியோரும், கிழக்கு பகுதி வட்ட செயலாளர்களாக எம்.சுரேஷ்குமார், ஜி.ராதா கிருஷ்ணன், மேற்கு பகுதி வட்ட செயலாளர்களாக ஆர்.நாகராஜன், எஸ்.மாசிலாமணி ஆகியோரும், ஆலந்தூர் கிழக்கு பகுதி வட்ட செயலாளராக எம்.ஏ.மூர்த்தி, மேற்கு பகுதி வட்ட செயலாளராக ஆர்.பால கிருஷ்ணன் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News