செய்திகள்
மரணம்

சிங்காரப்பேட்டை அருகே கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி பலி

Published On 2021-08-19 02:07 IST   |   Update On 2021-08-19 02:07:00 IST
சிங்காரப்பேட்டை அருகே கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கல்லாவி:

சிங்காரப்பேட்டை அருகே உள்ள கே.பேயனூர் கிராமத்தை சேர்ந்தவர் நாராயணன் (வயது 48). கூலித்தொழிலாளி. இவர் சம்பவத்தன்று சிங்காரப்பேட்டை அருகே பல்லன்கொட்டாய் கிராமத்தில் வேலைக்கு சென்று விட்டு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள கிணற்றில் நாராயணன் தவறி விழுந்தார். இதையடுத்து அவர் தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டார். இந்த சம்பவம் குறித்து சிங்காரப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News