செய்திகள்
கைது

வடகாடு அருகே மதுவிற்ற வாலிபர் கைது

Published On 2021-08-17 18:08 IST   |   Update On 2021-08-17 18:08:00 IST
வடகாடு அருகே மதுவிற்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வடகாடு:

வடகாடு அருகேயுள்ள புளிச்சங்காடு கைகாட்டி பகுதிகளில் மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், அப்பகுதிகளில் தனிப்படை போலீசார் ரோந்து சென்றனர். அப்போது டாஸ்மாக் கடை அருகே மோட்டார் சைக்கிளில் வைத்து மதுபாட்டில்களை விற்பனை செய்த அனவயல் ஜீவா நகரை சேர்ந்த ராஜ்குமார் (வயது 30) என்பரை கைது செய்து, அவரிடம் இருந்து 41 மதுபாட்டில்கள் மற்றும் ரூ.1,247, மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

Similar News