செய்திகள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக 25 பேருக்கு கொரோனா தொற்று
புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று புதிதாக 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்து 644 ஆக அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 13 பேர் குணமடைந்தனர். மாவட்டத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 27 ஆயிரத்து 888 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் கொரோனாவுக்கு தற்போது 381 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனாவுக்கு இறப்பு எண்ணிக்கை 375 ஆக உள்ளது.