செய்திகள்
புதுக்கோட்டை அருகே வேன் மோதியதில் பக்தர் பலி
புதுக்கோட்டை அருகே வேன் மோதியதில் பக்தர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை நரிமேடு பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது55). இவர் சம்பவத்தன்று சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரையாக நடந்து சென்றார். திருக்கோகர்ணம் கருவேப்பிலான் ரெயில்வே கேட் அருகே சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த வேன், அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து திருக்கோகர்ணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.