செய்திகள்
கொரோனா வைரஸ்

வேலூர் மாவட்டத்தில் இன்று 12 பேருக்கு கொரோனா

Published On 2021-08-15 10:42 GMT   |   Update On 2021-08-15 10:42 GMT
அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் 40 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த சில நாட்களாக கொரோனா மீண்டும் உயர்ந்து வருகிறது.
வேலூர்:

வேலூர் மாவட்டத்தில் நேற்று வரை 48,448 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 46,973 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

315 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.1098 பேர் பலியானார்கள். இன்று வேலூர் மாவட்டத்தில் 12 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் 40 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த சில நாட்களாக கொரோனா மீண்டும் உயர்ந்து வருகிறது.

ஊரடங்கு தளர்வு நேரத்தில் பொதுமக்கள் அதிகளவில் வெளியே வரவேண்டாம்.  இதனால் மீண்டும் கொரோனா பரவ வாய்ப்புள்ளது. அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். கொரோனா தடுக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News