செய்திகள்
கொரோனா தடுப்பூசி

கீரனூரில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம்

Published On 2021-08-12 02:03 IST   |   Update On 2021-08-12 02:03:00 IST
கீரனூர் வணிகர் சங்கமும், குன்றாண்டார்கோவில் வட்டார மருத்துவத் துறையும் இணைந்து கீரனூரில் இன்று (வியாழக்கிழமை) அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கொரோனா தடுப்பூசி முகாமை நடத்துகின்றன.
கீரனூர்:

கீரனூர் வணிகர் சங்கமும், குன்றாண்டார்கோவில் வட்டார மருத்துவத் துறையும் இணைந்து கீரனூரில் இன்று (வியாழக்கிழமை) அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கொரோனா தடுப்பூசி முகாமை நடத்துகின்றன. காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறும் இந்த முகாமில் இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள், இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் ஆதார் அட்டையுடன் முககவசம் அணிந்து வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Similar News