செய்திகள்
கோப்புபடம்

கறம்பக்குடி அருகே இளம்பெண் மர்ம மரணம்: போலீசார் விசாரணை

Published On 2021-08-11 21:09 IST   |   Update On 2021-08-11 21:09:00 IST
கறம்பக்குடி அருகே இளம்பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆலங்குடி:

கறம்பக்குடி அருகே உள்ள கலியரான் விடுதி தொண்டைமான் புஞ்சை கிராமத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மனைவி மோனிஷா (வயது 23). இவர்களுக்கு திருமணமாகி ஒரு ஆண்டு ஆகிறது. மோனிஷாகர்ப்பமாக இருந்தார். இந்தநிலையில் கடந்த 7-ந் தேதி மோனிஷா இறந்து விட்டார். அவரது உடலை உறவினர்கள் அடக்கம் செய்து விட்டனர்.

இதனிடையே மோனிஷா மரணத்தில் சந்தேகம் இருப்பதால் இறப்பிற்கான காரணத்தை அறிய வேண்டும் என்று கலியரான் விடுதி கிராம நிர்வாக அதிகாரி சதிஸ் குமார் கறம்பக்குடிபோலீசில் நேற்று புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News