செய்திகள்
விராலிமலை அருகே கிணற்றில் தவறி விழுந்து கேட்டரிங் மாணவர் பலி
விராலிமலை அருகே கிணற்றில் தவறி விழுந்து கேட்டரிங் மாணவர் உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விராலிமலை:
மணப்பாறை பிள்ளையார் பட்டியை சேர்ந்தவர் மாதவன் (வயது 20). இவர் கேட்டரிங் படித்து வந்தார். இந்நிலையில் விராலிமலை அருகே உள்ள பொத்தப்பட்டியில் நடைபெற்றுவரும் கருப்பர்கோவில் திருவிழாவிற்கு வந்தார்.
இந்நிலையில் அதிகாலை அதேபகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் நடந்து சென்ற போது அங்கிருந்த ஒரு கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று 2 மணி நேரம் போராடி மாதவனின் உடலை மீட்டனர்.
பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மணப்பாறை பிள்ளையார் பட்டியை சேர்ந்தவர் மாதவன் (வயது 20). இவர் கேட்டரிங் படித்து வந்தார். இந்நிலையில் விராலிமலை அருகே உள்ள பொத்தப்பட்டியில் நடைபெற்றுவரும் கருப்பர்கோவில் திருவிழாவிற்கு வந்தார்.
இந்நிலையில் அதிகாலை அதேபகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் நடந்து சென்ற போது அங்கிருந்த ஒரு கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று 2 மணி நேரம் போராடி மாதவனின் உடலை மீட்டனர்.
பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.