செய்திகள்
அன்னவாசல் அருகே லாட்டரி சீட்டு விற்றவர் கைது
அன்னவாசல் அருகே லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அன்னவாசல்:
அன்னவாசல் அருகே உள்ள வயலோகத்தில் லாட்டரி சீட்டுக்கள் விற்பனை செய்யப்படுவதாக அன்னவாசல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மதியழகன் மற்றும் போலீசார் அப்பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது வயலோகம் கடைவீதியில் உள்ள ஒரு பெட்டிக் கடையில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த பொன்னமராவதி தொட்டியம் பட்டியை சேர்ந்த பகுருதீன் அலிஅகமது (வயது 30) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து, அவரிடம் இருந்து 17 லாட்டரி சீட்டுக்கள், ரூ.2 ஆயிரம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.