செய்திகள்
கைது

இளம்பெண் கடத்தல்- போக்சோ சட்டத்தில் டிரைவர் கைது

Published On 2021-08-08 09:39 IST   |   Update On 2021-08-08 09:39:00 IST
இளம்பெண்ணை கடத்திச்சென்ற டிரைவர் ஆனந்த பிரகாஷ் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
விருதுநகர்:

விருதுநகர் அருகே உள்ள ஒரு பகுதியை சேர்ந்த 18 வயது நிரம்பாத இளம்பெண் மாயமாகி விட்டதாக அவரது தாயார் ஆமத்தூர் போலீசில் புகார் செய்தார். இதனைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சிவகாசி போஸ் காலனியை சேர்ந்த ஆனந்த பிரகாஷ் (வயது 20) என்ற டிரைவர், அந்த இளம் பெண்ணை கடத்திச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவர்களை கண்டறிந்து 2 பேரையும் மீட்டு வந்தனர். இருவருக்கும் ஏற்கனவே பழக்கம் இருந்தது விசாரணையில் தெரியவந்தது.

எனினும் 18 வயது நிரம்பாத இளம்பெண்ணை கடத்திச்சென்ற டிரைவர் ஆனந்த பிரகாஷ் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து காவலுக்குஅனுப்பி வைத்தனர்.

Similar News