செய்திகள்
வேதாரண்யத்தில் மயங்கி விழுந்து முதியவர் திடீர் மரணம்
வேதாரண்யத்தில் மயங்கி விழுந்து முதியவர் திடீர் மரணம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் நகராட்சிக்கு உட்பட்ட புஷ்கரணி கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம் (வயது 90). இவர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு இருந்ததால் தொடர்ந்து மருந்து மாத்திரை சாப்பிட்டு வந்தாராம். சம்பவத்தன்று இரவு சாப்பாட்டிற்கு பிறகு சாப்பிட வேண்டிய மருந்து மாத்திரைகளை சாப்பிடாமல் தூங்கி விட்டதாக தெரிகிறது.
காலையில் பார்த்த பொழுது சண்முகம் மயங்கிய நிலையில் இருந்துள்ளார். உடனடியாக அவரை உறவினர்கள் மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் கொண்டுவந்து சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.ஆனால் சிகிச்சை பலனின்றி சண்முகம் பரிதாபமாக இறந்துவிட்டார்.
இதுகுறித்து புகாரின் பேரில் வேதாரண்யம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.