செய்திகள்
கொரோனா வைரஸ்

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பேர் பலி

Published On 2021-08-06 15:25 IST   |   Update On 2021-08-06 15:25:00 IST
புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று புதிதாக 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 28 ஆயிரத்து 292 ஆக அதிகரித்துள்ளது. இந்தநிலையில் ஏற்கனவே கொரோனா சிகிச்சை பெற்றவர்களில் 44 பேர் குணமடைந்ததால் அவர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால், குணமடைந்தோர் எண்ணிக்கை 27 ஆயிரத்து 612 ஆக உயர்ந்துள்ளது. ஆனால், சிகிச்சை பலனின்றி 2 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம், கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 370 பேர் உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி கொரோனாவுக்கு 310 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Similar News