செய்திகள்
விபத்து பலி

பணப்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி

Published On 2021-08-01 17:36 IST   |   Update On 2021-08-01 17:36:00 IST
பணப்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
படப்பை:

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வெள்ளகொண்டான் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவருடைய மகன் சிவகாமி நாதன் (வயது 22) இவர் காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை பகுதியில் தங்கியிருந்து ஒரகடம் பகுதியில் உள்ள தனியார் மோட்டார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். கடந்த 15 நாட்களாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் படப்பையில் இருந்து ஒரகடம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். பணப்பாக்கம் அருகே செல்லும் போது நிலை தடுமாறி சாலையில் விழுந்து படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஒரகடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சிவகாமிநாதனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Similar News