செய்திகள்
கைது

வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் மூதாட்டியிடம் செயின் பறிப்பு- பெண் கைது

Published On 2021-08-01 15:43 IST   |   Update On 2021-08-01 15:43:00 IST
வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் மூதாட்டியிடம் தாலி செயினை பறித்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
வேதாரண்யம்:

வேதாரண்யம் தாலுக்கா பன்னாள்கிழக்கு கிராமத்தை சேர்ந்தவர் ஜெகதீசன் (வயது 70). இவரது மனைவி நாகலட்சுமி (68). இவர் உடல்நிலை குறைவால் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். அதே அரசு மருத்துவமனையில் பண்ணிநேர் மொழியால்புறம் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் மனைவி பிரியதர்ஷினி (32) என்பவரும் சிகிச்சை பெற்று வருகிறார்.

நாகலட்சுமிக்கு பக்கத்தில் உள்ள படுக்கையில் பிரியதர்ஷினி இருந்து வருகிறார். சம்பவத்தன்று இரவு நாகலட்சுமி கழுத்தில் கிடந்த தாலி செயினை அறுத்து அதில் உள்ள இரண்டு தாலி, குண்டுகளையும் எடுத்து பிரியதர்ஷினி மறைத்து வைத்துள்ளார்.

இதுகுறித்து ஜெகதீசன் வேதாரண்யம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சுப்ரியா மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே பிரியதர்ஷினி டிஸ்சார்ஜ் ஆகி சென்று விட்டார். அப்போது அவர் திருடிய தங்க செயினை ஒரு அடகு கடையில் விற்க முற்பட்டபோது போலீசார் பிரியதர்ஷினியை சுற்றி வளைத்து மடக்கி பிடித்து கைது செய்தனர்.

Similar News