செய்திகள்
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.
வேலூர்:
வேலூர், மக்கான் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் கிண்டு என்ற இளங்கோவன் (வயது 45). இவர் வேலூர் மார்க்கெட்டில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு 6-ம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். அதன்பேரில் சிறுமியின் தந்தை இளங்கோவனிடம் கேட்டபோது, அவரை இளங்கோவன் ஆபாசமாக பேசி தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் தரப்பில் வேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து இளங்கோவனை கைது செய்தனர்.
வேலூர், மக்கான் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் கிண்டு என்ற இளங்கோவன் (வயது 45). இவர் வேலூர் மார்க்கெட்டில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு 6-ம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். அதன்பேரில் சிறுமியின் தந்தை இளங்கோவனிடம் கேட்டபோது, அவரை இளங்கோவன் ஆபாசமாக பேசி தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் தரப்பில் வேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து இளங்கோவனை கைது செய்தனர்.