செய்திகள்
கொரோனா தடுப்பூசி

வாய்மேடு பகுதியில் கொரோனா தடுப்பூசி முகாம்

Published On 2021-07-30 14:27 GMT   |   Update On 2021-07-30 14:27 GMT
வாய்மேட்டை அடுத்த பஞ்சநதிக்குளம மேற்கு ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் மணிமேகலை சிவகுருபாண்டியன் தலைமையில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
வாய்மேடு:

வாய்மேட்டை அடுத்த தென்னடார் ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் தேவிசெந்தில் தலைமை தாங்கினார்.முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அன்புவேலன் முன்னிலை வகித்தார். முகாமில் 350-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.இதில் சுகாதார ஆய்வாளர் அன்பரசன், செவிலியர் சுமதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.இதேபோல வாய்மேட்டை அடுத்த பஞ்சநதிக்குளம மேற்கு ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் மணிமேகலை சிவகுருபாண்டியன் தலைமையில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமில் தி.மு.க. ஊராட்சி செயலாளர் ராமநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் 300 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

திருமருகல் ஒன்றியம் சேஷமூலை ஊராட்சியில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் சந்திரகலா கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். வட்டார மருத்துவ அலுவலர் அறிவொளி முகாமை தொடங்கி வைத்தார். இதில் 228 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. முகாமில் டாக்டர்கள் மணிவேல், பாஸ்கரன், ஊராட்சி செயலாளர் அருள்ராணி, சுகாதார ஆய்வாளர் ரகுநாதன், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ருக்மணி ஜெயராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News