செய்திகள்
தற்கொலை

அரியலூர் அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2021-07-26 11:41 GMT   |   Update On 2021-07-26 11:41 GMT
அரியலூர் அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கீழப்பழுவூர்:

அரியலூர் மாவட்டம் கருவிடைச்சேரி கிராமத்தை சேர்ந்த கணேசனின் மகன் ரமேஷ்(வயது 31). கூலித்தொழிலாளி. இவருக்கு கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு உதயகுமாரி (21) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்று, 8 மாதத்தில் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் அவ்வப்போது ரமேஷ் மது குடித்துவிட்டு வந்து, உதயகுமாரியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு, உதயகுமாரி கோபித்துக்கொண்டு அதே கிராமத்தில் உள்ள அவரது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதையடுத்து அன்று ரமேஷ், உதயகுமாரியின் தாய் வீட்டிற்கு குழந்தையை கொடுக்குமாறு கேட்டு, வாக்குவாதம் செய்துள்ளார். அதற்கு உதயகுமாரி மறுத்ததால், அவர் அங்கிருந்து சென்று விட்டார். இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்பு ரமேசின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் அக்கம், பக்கத்தினர் வீட்டின் கதவை திறக்க முயன்றபோது உள்பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு ரமேஷ் தூங்கில் பிணமாக தொங்கினார். அவரது உடல் அழுகிய நிலையில் இருந்தது. இது பற்றி அவரது குடும்பத்தினருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், ரமேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News