செய்திகள்
நூலகங்கள் திறப்பு

நீலகிரியில் முழு ஊரடங்கிற்கு பிறகு நூலகங்கள் திறப்பு

Published On 2021-07-25 10:18 GMT   |   Update On 2021-07-25 10:18 GMT
நூலகத்தில் உட்கார்ந்து படிக்க அனுமதி இல்லை. போட்டி தேர்வுக்கு தயாராகிறவர்கள், ஆராய்ச்சி படிப்புக்காக புத்தகங்கள் எடுத்து படிப்பவர்களுக்கு அனுமதி உள்ளது.
ஊட்டி:

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக பொது நூலகத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் மாவட்ட மைய நூலகம் மற்றும் பிற இடங்களில் உள்ள பகுதி நேர நூலகங்கள் அனைத்தும் மூடப்பட்டன. பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி நூலகங்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி நீலகிரியில் நேற்று முதல் முழு ஊரடங்குக்கு பின்னர் நூலகங்கள் திறக்கப்பட்டு உள்ளது.

ஆனால் மாவட்ட மைய நூலகத்தில் உட்கார்ந்து படிக்க அனுமதி இல்லை. போட்டி தேர்வுக்கு தயாராகிறவர்கள், ஆராய்ச்சி படிப்புக்காக புத்தகங்கள் எடுத்து படிப்பவர்களுக்கு அனுமதி உள்ளது. மேலும் உறுப்பினர்களாக உள்ளவர்கள் தங்களுக்கு வேண்டிய புத்தகங்களை தேர்வு செய்து வீட்டிற்கு எடுத்து சென்று படிக்கலாம். அங்கு சமூக இடைவெளியை கடைபிடிப்பது உடன், கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

12 வயதுக்குள், 60 வயதிற்கு மேல் இருப்பவர்களுக்கு அனுமதி இல்லை. அங்கு கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டு இருக்கிறது.
Tags:    

Similar News