செய்திகள்
நீலகிரியில் 58 பேருக்கு கொரோனா- ஒருவர் பலி
நீலகிரி மாவட்டத்தில் புதிதாக 58 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதியானது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் நேற்று புதிதாக 58 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதியானது. இதன் மூலம் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்து 131 ஆக உயர்ந்து உள்ளது. நேற்று 93 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம் இதுவரை 29 ஆயிரத்து 177 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். நேற்று கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்தார். இதன் மூலம் இதுவரை 174 பேர் இறந்து இருக்கின்றனர். தற்போது 780 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.