செய்திகள்
தா.பழூர் அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
தா.பழூர் அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூர் காலனி தெருவை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது 58). விவசாயக் கூலி தொழிலாளி. இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று வயிற்றுவலி அதிகமானதால், அதை தாங்க முடியாத மணிகண்டன் வீட்டில் தூக்குப்போட்டு தொங்கினார். இதைக்கண்ட உறவினர்கள், அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மணிகண்டன் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிர் இழந்தார். இதுகுறித்து மணிகண்டனின் மனைவி வளர்மதி தா.பழூர் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.