செய்திகள்
ஒரகடம் வனப்பகுதி அருகே சாலை வளைவில் எதிர் திசையில் வேகமாக வந்த தனியார் பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
படப்பை:
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா தென்கழனி கிராமத்தை சேர்ந்தவர் அஜித்குமார் (வயது 24), இவர் நேற்று முன்தினம் தாம்பரம் அருகே உள்ள முடிச்சூர் பகுதியில் உள்ள தனது சித்தியின் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வாலாஜாபாத்- வண்டலூர் சாலை வழியாக சென்று கொண்டிருந்தார்.
ஒரகடம் வனப்பகுதி அருகே சாலை வளைவில் எதிர் திசையில் வேகமாக வந்த தனியார் பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த அஜித்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஒரகடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அஜித்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து ஒரகடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா தென்கழனி கிராமத்தை சேர்ந்தவர் அஜித்குமார் (வயது 24), இவர் நேற்று முன்தினம் தாம்பரம் அருகே உள்ள முடிச்சூர் பகுதியில் உள்ள தனது சித்தியின் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வாலாஜாபாத்- வண்டலூர் சாலை வழியாக சென்று கொண்டிருந்தார்.
ஒரகடம் வனப்பகுதி அருகே சாலை வளைவில் எதிர் திசையில் வேகமாக வந்த தனியார் பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த அஜித்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஒரகடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அஜித்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து ஒரகடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.