செய்திகள்
கோப்புபடம்

கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதை தடுக்கக்கோரி ஆர்ப்பாட்டம்

Published On 2021-07-18 15:07 IST   |   Update On 2021-07-18 15:07:00 IST
ஜெயங்கொண்டம் அருகே கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதை தடுக்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் காந்தி பூங்கா முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயிகள் சங்க ஆண்டிமடம் ஒன்றிய தலைவர் சங்கபாலன் தலைமை தாங்கினார். விவசாய சங்க மாவட்ட செயலாளர் மகாராஜன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம், மாதர் சங்க மாவட்ட செயலாளர் பத்மா ஆகியோர் கண்டனம் தெரிவித்து பேசினர். ஆர்ப்பாட்டத்தின்போது, மேகதாதுவில் காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு, உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு விரோதமாக அணை கட்டுவதை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும், அரியலூர் மாவட்டத்தில் வீரசோழபுரம், குருவாலப்பர் கோவில். விழப்பள்ளம், சோழங்குறிச்சி, தேவமங்கலம், கரைமேடு ஆகிய இடங்களில் மீண்டும் ஹைட்ரோகார்பன் திட்டத்தை அமல்படுத்தும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும். நூறு நாள் வேலைத் திட்டத்தில் சாதிவாரியாக வேலையும், கூலியும், 50 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு வேலை இல்லை என்ற முடிவையும் மத்திய அரசு கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் விவசாய சங்க மாவட்ட பொருளாளர் இளவரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News