செய்திகள்
கோப்புபடம்

கீழ்வேளூர் பகுதியில் சாராயம் விற்ற 2 பேர் கைது

Published On 2021-07-17 11:50 GMT   |   Update On 2021-07-17 11:50 GMT
கீழ்வேளூர் பகுதியில் சாராயம் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிக்கல்:

கீழ்வேளூர் அருகே ஏரவாஞ்சேரி மாரியம்மன் கோவில் பகுதியில் கீழ்வேளூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகத்திற்குரிய முறையில் நின்ற ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். . விசாரணையில் அவர், நீலப்பாடி, கொல்லுபட்டறை தெருவை சேர்ந்த விஜேயந்திரன் (வயது 40) என்பதும், இவர் காரைக்கால் பகுதியில் இருந்து சாராயம் கடத்தி வந்து விற்பனை செய்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜேந்திரனை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

இதே போல் நீலப்பாடி மெயின் ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது சாராயம் விற்ற கூத்தூர் ராயத்தமங்கலம் பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (40) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News