செய்திகள்
போளூர் பகுதியில் 2 நாட்களில் 672 பேருக்கு கொரோனா தடுப்பூசி
போளூர் பகுதியில் 2 நாட்களில் 672 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
போளூர்:
போளூர், களம்பூர், செங்குணம், ஆர்.குண்ணத்தூர், படவேடு, சந்தவாசல், வாழியூர் ஆகிய 7 இடங்களில் கடந்த 2 நாட்களில் 672 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி போட்டுக்கொண்டதாக, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சுந்தர் தெரிவித்தார்.