செய்திகள்
திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனாவுக்கு 71 பேர் பாதிப்பு
திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் தற்போது குறைந்து வருகிறது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் தற்போது குறைந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று 71 பேர் தொற்றுக்கு பாதிக்கப்பட்டு உள்ளனர். 2 பேர் உயிரிழந்து உள்ளனர். 1,121 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுவரை மாவட்டத்தில் 50 ஆயிரத்து 862 பேர் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 49 ஆயிரத்து 118 பேர் குணமடைந்து உள்ளனர். 623 பேர் உயிரிழந்து உள்ளனர்.