செய்திகள்
கோப்புபடம்

படப்பை அருகே மொபட் மீது கார் மோதியதில் பெண் பலி

Published On 2021-07-14 14:17 GMT   |   Update On 2021-07-14 14:17 GMT
படப்பை அருகே மொபட் மீது கார் மோதியதில் பெண் பலியானார்.
படப்பை:

காஞ்சீபுரம் மாவட்டம் வரதராஜபுரம் பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் மரியா ஜெனிபர் (வயது 57). நேற்று இவர் மொபட்டில் வண்டலூர்- வாலாஜாபாத் சாலையில் கரசங்கல் துண்டல் கழணி அருகே சென்று கொண்டிருந்தார்.

சாலை திருப்பத்தில் செல்லும்போது படப்பையில் இருந்து வண்டலூர் நோக்கி சென்ற கார் மின்னல் வேகத்தில் மொபட் மீது மோதியது.

மொபட்டில் இருந்து தூக்கி வீசப்பட்ட மரியா ஜெனிபர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மணிமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News