செய்திகள்
விபத்து

வேதாரண்யம் அருகே மின்வாரிய ஊழியர் சாலை விபத்தில் பலி

Published On 2021-07-14 15:29 IST   |   Update On 2021-07-14 15:29:00 IST
வேதாரண்யம் அருகே லாரியை முந்தி செல்ல முயன்றபோது ஏற்பட்ட விபத்தில் சிக்கி மின்வாரிய ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.
வேதாரண்யம்: 

வேதாரண்யம் அடுத்த கரியாப்பட்டினத்தில் வயர்மேன் ஆக பணிபுரிபவர் குமார் (வயது 42). அகஸ்தியம்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர். 

இவர் கரியாப்பட்டினம் மின்சார வாரிய அலுவலகத்தில் இருந்து பணிக்காக குரவப்புலத்திற்கு செல்லும்போது செண்பகராயநல்லூர் வளைவு அருகே செங்கல் ஏற்றி வந்த லாரியை முந்தி செல்ல முயன்றபோது விபத்தில் சிக்கி கீழே விழுந்து விட்டார். அவரை மீட்டு திருத்துறைப்பூண்டி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி செய்து மேல் சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்து விட்டார். 

கரியாப்பட்டினம் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.

Similar News