செய்திகள்
மருத்துவ முகாம்

அகரக்கொந்தகை ஊராட்சியில் மருத்துவ பரிசோதனை முகாம்

Published On 2021-07-13 21:19 IST   |   Update On 2021-07-13 21:19:00 IST
திருமருகல் ஒன்றியம் அகரக்கொந்தகை ஊராட்சி வாழ்மங்கலத்தில் மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது.
திட்டச்சேரி:

திருமருகல் ஒன்றியம் அகரக்கொந்தகை ஊராட்சி வாழ்மங்கலத்தில் மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் தமிழரசி தலைமை தாங்கினார். வட்டார மருத்துவ அலுவலர் அறிவொளி, ஒன்றியக்குழு உறுப்பினர் ஜெயந்தி சுவாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அகரக்கொந்தகை, வாழ்மங்கலம் பகுதிகளை சேர்ந்த 150 பேர் கலந்து கொண்டு காய்ச்சல், சளி, நிமோனியா காய்ச்சல் மற்றும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. முகாமில் மருத்துவர் மணிவேல், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கற்பகம், சுகாதார ஆய்வாளர்கள் பரமநாதன், பிரபாகரன், ஊராட்சி செயலாளர் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News