செய்திகள்
கைது

மாணவியின் ஆபாச படங்களை சமூக வலைதளத்தில் வெளியிடுவதாக மிரட்டல்- மாணவன் கைது

Published On 2021-07-11 09:18 GMT   |   Update On 2021-07-11 09:18 GMT
பணம் மற்றும் நகை கேட்டு மாணவியின் ஆபாச படங்களை சமூக வலைதளத்தில் வெளியிடுவதாக மிரட்டல் விடுத்த பிளஸ்-2 மாணவனை போலீசார் கைது செய்தனர்.
ஸ்ரீபெரும்புதூர்:

ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்த 15 வயதுள்ள மாணவி ஒருவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். அவருக்கும் அதே பகுதியில் உள்ள 17 வயது பிளஸ்-2 மாணவர் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நெருங்கி பழகி வந்தனர். 

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவர் திடீரென மாணவியிடம் ஆடம்பர செலவுக்காக பணம் மற்றும் நகை வேண்டும் என்று கேட்டார். ஆனால் அவர் கொடுக்க மறுத்தார். 

இதனால் ஆத்திரம் அடைந்த மாணவன், மாணவியுடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும், மாணவியின் ஆபாச படத்தையும் சமூக வலைதளத்தில் வெளியிடுவதாக மிரட்டினார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி இது பற்றி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். அவர்கள் ஸ்ரீபெரும்புதூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். 

விசாரணையில் பிளஸ்-2 மாணவர் நகை, பணம் கேட்டு மாணவியை மிரட்டி இருப்பது தெரிந்தது. இதையடுத்து மாணவனை போலீசார் கைது செய்தனர். அவரை செங்கல்பட்டு சீர்திருத்த பள்ளியில் சேர்த்து உள்ளனர்.

Tags:    

Similar News