செய்திகள்
காதல் ஜோடி

பள்ளிகொண்டா போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்

Published On 2021-07-10 15:10 IST   |   Update On 2021-07-10 15:10:00 IST
காதலுக்கு ரேவதியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் அவரை, சிலம்பரசன் அழைத்துவந்து, வேலாடும் தணிகை மலை முருகன் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார்.
அணைக்கட்டு:

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா வசந்தநடை கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகன் சிலம்பரசன் (வயது 28). கட்டிட தொழிலாளி. இவர் தினமும் காட்பாடியிலிருந்து ரெயிலில் அரக்கோணம் சென்று வேலை செய்து வருகின்றார். இந்தநிலையில் அரக்கோணம் பரமேஸ்வரமங்கலம் பகுதியைச் சேர்ந்த செவிலியர் ரேவதி (20) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இவர்களுடைய காதலுக்கு ரேவதியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் அவரை, சிலம்பரசன் நேற்று முன்தினம் அழைத்துவந்து அணைக்கட்டு அடுத்த மூலை கேட் பகுதியில் உள்ள வேலாடும் தணிகை மலை முருகன் கோவிலில் வைத்து திருமணம்செய்து கொண்டார்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் ரேவதியின் பெற்றோர், உறவினர்கள் சிலம்பரசன் வீட்டுக்கு வந்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால் காதல் ஜோடிகள் அங்கிருந்து பள்ளிகொண்டா போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதனால் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் பேச்சுவார்த்தை நடத்தினார். ரேவதி பெற்றோருடன் செல்ல மறுத்து விட்டதால் சிலம்பரசனுடன் அனுப்பி வைக்கப்பட்டார்.

Similar News