செய்திகள்
உத்திரமேரூர் அருகே திருட்டுத்தனமாக மது விற்ற 5 பேர் கைது
உத்திரமேரூர் அருகே திருட்டுத்தனமாக மது விற்ற 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்திரமேரூர்:
டாஸ்மாக் கடையில் மது பாட்டில்களை வாங்கி திருட்டுத்தனமாக அதிக விலைக்கு உத்திரமேரூர் சுற்றியுள்ள பகுதிகளில் விற்பதாக உத்திரமேரூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் வந்தது. போலீசார் இது சம்பந்தமாக உத்திரமேரூர் பகுதிகளில் ஆய்வில் ஈடுபட்டனர்.
அப்போது காவனூர் புதுச்சேரி கிராமத்தை சேர்ந்த சுதாகர் (வயது 37), அதே ஊரை சேர்ந்த திருமலை (45), உத்திரமேரூர் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த சுமதி (25), கம்மாளம்பூண்டி கிராமம் பழத்தோட்டத்தை சேர்ந்த பொன்னி (47), படூர் கிராமத்தை சேர்ந்த லோகநாதன் (48) ஆகியோர் திருட்டுத்தனமாக மது பாட்டில்களை அதிக விலைக்கு விற்றது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.