செய்திகள்
விபத்து பலி

கீழ்வேளூரில் லாரி மோதி வாலிபர் பலி

Published On 2021-07-04 17:07 IST   |   Update On 2021-07-04 17:07:00 IST
கீழ்வேளூரில் லாரி மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிக்கல்:

கீழ்வேளூர் அருகே அகரகடம்பனூர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் தியாகராஜன். இவர் திருவாரூரில் தையல் தொழிலாளியாக வேலைபார்த்து வருகிறார். இவருடைய மகன் யுவன்சங்கர் (வயது21). நேற்று காலை வேலைக்காக தியாகராஜன் மற்றும் அவரது மகன் யுவன் சங்கருடன் திருவாரூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளை தியாகராஜன் ஓட்டி சென்றார். நாகை- திருவாரூர் தேசிய நெடுஞ்சாலையில் கீழ்வேளூர் பிள்ளை தெருவாசல் பகுதியில் சென்ற போது அந்த வழியாக நாகையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் தியாகராஜன், யுவன்சங்கர் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். உடனே அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு 108 ஆம்புலன்சு மூலம் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், யுவன் சங்கர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.தியாகராஜனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் கரூர் பகுதியை சேர்ந்த கதிர்வேல் மகன் லோகநாதன் (31) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News