செய்திகள்
இடமாற்றம்

வேலூர் சரகத்தில் 6 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்

Published On 2021-07-03 16:24 IST   |   Update On 2021-07-03 16:24:00 IST
காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஹேமமாலினி திருவண்ணாமலை தாலுகாவுக்கும், வேலூர் மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவில் பணியாற்றி வந்த செந்தில்குமாரி கே.வி.குப்பத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
வேலூர்:

வேலூர் சரகத்தில் 6 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி வேலூர் மாவட்ட தனிப்பிரிவு இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த அசோகன் வேலூர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவுக்கும், அங்கு பணியாற்றிய சந்திரகுமார் பொன்னைக்கும், அங்கு பணியாற்றிய காண்டீபன் ஆற்காடு தாலுகாவுக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

ஆற்காடு தாலுகா போலீஸ்நிலையத்தில் பணியாற்றி வந்த பாலு செய்யாறுக்கும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஹேமமாலினி திருவண்ணாமலை தாலுகாவுக்கும், வேலூர் மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவில் பணியாற்றி வந்த செந்தில்குமாரி கே.வி.குப்பத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கான உத்தரவை டி.ஐ.ஜி. ஏ.ஜி.பாபு பிறப்பித்துள்ளார்.

Similar News