செய்திகள்
வாய்மேடு அருகே சிறுமியை மிரட்டிய வாலிபர் கைது
வாய்மேடு அருகே ‘போக்சோ’ வழக்கை திரும்பப்பெறக்கோரி சிறுமியை மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
வாய்மேடு:
நாகை மாவட்டம் வாய்மேடு அருகே உள்ள அண்ணாப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் அரவிந்தன் (வயது24). இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறுமி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறி ‘போச்சோ’ சட்டத்தில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த அவர், சம்பவத்தன்று அந்த சிறுமியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தன் மீதான போக்சோ வழக்கை திரும்பப்பெறக்கோரி மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து சம்பந்தப்பட்ட சிறுமி வாய்மேடு போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அரவிந்தனை கைது செய்தனர்.