செய்திகள்
விபத்து

பெருமுகையில் கார் மோதி மூதாட்டி பலி

Published On 2021-06-25 09:11 GMT   |   Update On 2021-06-25 09:11 GMT
பெருமுகையில் கார் மோதி மூதாட்டி பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் கார் டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வேலூர்:

வேலூரை அடுத்த பெருமுகையை சேர்ந்தவர் புஷ்பா (வயது 76). இவர் நேற்று முன்தினம் மருந்துக்கடையில் மாத்திரை வாங்குவதற்காக சென்றார். பெருமுகை பஸ்நிறுத்தம் அருகே பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த கார் திடீரென புஷ்பா மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயமடைந்தார். இதைக்கண்ட பொதுமக்கள் உடனடியாக அவரை மீட்டு வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு புஷ்பாவை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியில் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து சத்துவாச்சாரி போலீசார் வழக்குப்பதிந்து நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை சேர்ந்த கார் டிரைவர் ராகுலிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News