செய்திகள்
திருட்டு

காரைக்குடி அருகே வீடு புகுந்து திருட்டு

Published On 2021-06-23 15:00 GMT   |   Update On 2021-06-23 15:00 GMT
காரைக்குடி அருகே வீடு புகுந்து திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரைக்குடி:

காரைக்குடி புறநகர் முத்துநகர் பகுதியில் வசிப்பவர் பழனியப்பன். இவர் தனது மகள் திருமணத்தையொட்டி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சொந்த ஊரான வேப்பங்குளம் சென்றுவிட்டார். ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து ரூ.81 ஆயிரத்தை திருடிச் சென்று விட்டனர். இது குறித்த புகாரின் பேரில் காரைக்குடி வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News