செய்திகள்
மழை

ஈரோடு-மொடக்குறிச்சி பகுதியில் பரவலாக பெய்த மழை

Published On 2021-06-23 09:56 GMT   |   Update On 2021-06-23 09:56 GMT
மொடக்குறிச்சி, சென்னிமலை சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.

ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது. காலை தொடங்கி மாலை வரை வெயிலில் தாக்கதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்தனர். குறிப்பாக வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.

இந்நிலையில் நேற்றும் வழக்கம் போல் காலை முதல் மாலை வரை வெயில் கொளுத்தி வாங்கியது. மாநகர் பகுதியில் நேற்று இரவு 10.40 மணிக்கு மேல் திடீரென இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்ல செல்ல மழை வெளுத்து வாங்கியது.

இதேப்போல் மொடக்குறிச்சி, சென்னிமலை சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.

ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

ஈரோடு-15, மொடக்குறிச்சி-15, சென்னிமலை-5, பவானிசாகர்- 1.2.

Tags:    

Similar News