செய்திகள்
பவானிசாகர் அணை

பவானிசாகர் அணை நீர்மட்டம் 93.10 அடியாக உயர்வு

Published On 2021-06-23 09:23 GMT   |   Update On 2021-06-23 09:23 GMT
கடந்த வாரம் பவானிசாகர் அணைக்கு 6 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் அணைக்கு வரும் தண்ணீர் வரத்து குறைந்தது.

சத்தியமங்கலம்:

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணை நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த வாரம் பலத்த மழை பெய்தது. மேலும் பில்லூர் அணையில் இருந்தும் கூடுதல் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இதனால் கடந்த வாரம் பவானிசாகர் அணைக்கு 6 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் அணைக்கு வரும் தண்ணீர் வரத்து குறைந்தது.

இந்த நிலையில் ஊட்டி மற்றும் பவானிசாகர் அணை நீர் பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பவானிசாகர் அணைக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரித்தது.

பவானிசாகர் அணைக்கு இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 2 ஆயிரத்து 944 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணை நீர் மட்டம் 93.10 அடியாக உயர்ந்தது. நீர் இருப்பு 23 ஆயிரத்து 661 டி.எம்.சியாக உள்ளது.

அணையில் இருந்து அரக்கன்கோட்டை, தடப்பள்ளி வாய்க்காலுக்கு 800 கனஅடி மற்றும் குடிநீருக்கு 200 கனஅடி என 1000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News