செய்திகள்
திருவலம் அருகே பெற்றோர் கண்டித்ததால் 2 மாணவிகள் மாயம்
திருவலம் அருகே பெற்றோர் கண்டித்ததால் 2 மாணவிகள் மாயமானதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவலம்:
வேலூர் மாவட்டம், திருவலம் அருகே உள்ள கரிகிரி பகுதியை சேர்ந்தவர் 14 வயது மாமவி. 7-ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது வீட்டுக்கு பாகாயத்தை சேர்ந்த உறவினர் மகள் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் வந்துள்ளார். இவர்கள் இருவரும் செல்போனை அடிக்கடி பயன்படுத்தி உள்ளனர். இதனை பெற்றோர் கண்டித்துள்ளனர்.
இதனையடுத்து நேற்று முன்தினம் மாணவிகள் இருவரும் வீட்டை விட்டு சென்று விட்டனர். அவர்கள் எங்கு சென்றார்கள் என்பது தெரியவில்லை. இதுகுறித்து திருவலம் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் மாவட்டம், திருவலம் அருகே உள்ள கரிகிரி பகுதியை சேர்ந்தவர் 14 வயது மாமவி. 7-ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது வீட்டுக்கு பாகாயத்தை சேர்ந்த உறவினர் மகள் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் வந்துள்ளார். இவர்கள் இருவரும் செல்போனை அடிக்கடி பயன்படுத்தி உள்ளனர். இதனை பெற்றோர் கண்டித்துள்ளனர்.
இதனையடுத்து நேற்று முன்தினம் மாணவிகள் இருவரும் வீட்டை விட்டு சென்று விட்டனர். அவர்கள் எங்கு சென்றார்கள் என்பது தெரியவில்லை. இதுகுறித்து திருவலம் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.