செய்திகள்
ஊரடங்கில் விதிமீறல்: 9 பேர் மீது வழக்கு
கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறுபவர்கள் மீது போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
இளையான்குடி:
கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறுபவர்கள் மீது போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் இளையான்குடியில் பல்வேறு இடங்களில் போலீசார் ஊரடங்கு விதிமுறைகளை யாராவது மீறுகிறார்களா? என கண்காணித்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிள்களில் வந்த 9 பேர் தேவையின்றி ஊர் சுற்றியது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்து வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.