செய்திகள்
தற்கொலை

சிங்கம்புணரி அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

Published On 2021-06-19 13:12 GMT   |   Update On 2021-06-19 13:12 GMT
சிங்கம்புணரி அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிங்கம்புணரி:

சிங்கம்புணரி அருகே மருதிப்பட்டியை சேர்ந்த சவுகத் அலி மகன் மைதீன் (வயது 32). தொழிலாளி. இவரது மனைவி ஜெனிபர் பானு. கருத்து வேறுபாடு காரணமாக ஜெனிபர்பானு அவரை பிரிந்து சென்று விட்டார்.

இந்த நிலையில் மைதீன் மனைவி பிரிந்து சென்ற விரக்தியில் கடந்த 10-ந்தேதி எலிபேஸ்ட்(விஷம்) எடுத்து சாப்பிட்டு விட்டார். இதில் மயங்கி விழுந்த அவர் சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இது குறித்து எஸ்.வி.மங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News