ஊரடங்கை மீறியதாக 364 வாகனங்கள் பறிமுதல்
ஈரோடு:
தமிழகத்தில் ஊரடங்கின் 26-வது நாளான நேற்றும் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். நேற்று மட்டும் முக கவசம் அணியாமல் வந்த 232 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது. சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத 20 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு தலா ரூ.500 அபராதம் விதிக்கபட்டது.
ஊரடங்கு தடையை மீறி சுற்றியதாக 394 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மேலும் 348 இருசக்கர வாகனங்களும், 146 நான்கு சக்கர வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். நேற்று மட்டும் ரூ.2 லட்சத்து 18 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வசூல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
இதேப்போல் மாநகர பகுதியில் மாநகராட்சி பணியாளர்கள் ஆங்காங்கே சோதனை செய்து முககவசம் அணியாமல் வந்த 100 பேருக்கு தலா ரூ.200 அபரா தம் விதித்தனர். இதன் மூலம் ரூ.20 ஆயிரம் அபராதம் வசூல் செய்யப்பட்டது.
இதேபோல் சமூக இடை வெளியை கடைப்பிடிக்காத 5 பேருக்கு தலா ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் அனுமதியின்றி செயல்பட்ட 2 கடைகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து அந்த 2 கடைகளும் பூட்டி சீல் வைக்கப்பட்டது.