செய்திகள்
குடிநீர் தட்டுப்பாடு

குடிநீர் இல்லாமல் மலைகிராம மக்கள் அவதி

Published On 2021-06-19 09:51 GMT   |   Update On 2021-06-19 09:51 GMT
மின் மோட்டாரை பழுது நீக்கி சீரான முறையில் முறையில் குடிநீர் வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலைகிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தாளவாடி ஒன்றியம் திங்களூர் ஊராட்சிக்கு உட்பட்டது சுஜில்கரை கிராமம். இங்கு சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதி மக்களுக்கு பஞ்சாயத்து சார்பில் ஆழ்குழாய் கிணறு அமைத்து குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மின் மோட்டார் பழுது ஏற்பட்டு கடந்த ஒருவாரமாக குடிநீர் இல்லாமல் கிராம மக்கள் அவதிபட்டு வருகின்றனர். இதனால் இப்பகுதி மக்கள் குடிநீருக்காக பல கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று தோட்டத்து பகுதிகளில் உள்ள கிணறுகளில் தண்ணீர் எடுத்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பழுதாகி உள்ள மின் மோட்டாரை பழுது நீக்கி சீரான முறையில் முறையில் குடிநீர் வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலைகிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News