செய்திகள்
நகை பறிப்பு

கே.புதுப்பட்டி அருகே நள்ளிரவில் பெண்களிடம் 6 பவுன் சங்கிலி பறிப்பு

Published On 2021-06-18 13:19 GMT   |   Update On 2021-06-18 13:19 GMT
கே.புதுப்பட்டி அருகே நள்ளிரவில் பெண்களிடம் 6 பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
அரிமளம்:

புதுக்கோட்டை மாவட்டம், கே.புதுப்பட்டி போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட தேனீப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 36). இவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் ஒரு அறையிலும், இவருடைய தாய் ரெத்தினம் மற்றொரு அறையிலும் படுத்து தூங்கிக் கொண்டு இருந்தனர்.

அப்போது அவர்கள் காற்றுக்காக கதவை திறந்து வைத்து இருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது நள்ளிரவு நேரத்தில் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர் கார்த்திக் மனைவி கழுத்தில் அணிந்திருந்த 2½ பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டார்.

இதேபோல, பாப்பான்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் (55) இவருடைய மனைவி கலையரசி. இவர்கள் இருவரும் வீட்டின் முன் பகுதியில் உள்ள கார் நிறுத்தும் இடமான போர்டிகோவில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர்.

அப்போது நள்ளிரவு நேரத்தில் கலையரசி கழுத்தில் அணிந்திருந்த 3½ பவுன் தங்க சங்கிலியை மர்ம நபர் பறித்துக் கொண்டு தைல மர காட்டுப் பகுதிக்குள் புகுந்து தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து கார்த்திக் மற்றும் கிருஷ்ணன் கொடுத்த புகாரின்பேரில் கே.புதுப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News