செய்திகள்
கோப்புப்படம்

விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக 162 பேருக்கு கொரோனா தொற்று

Published On 2021-06-17 08:41 IST   |   Update On 2021-06-17 08:41:00 IST
நோய் பாதிப்புக்கு மேலும் 3 பேர் பலியாகி உள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 504 ஆக உயர்ந்துள்ளது.
விருதுநகர்:

மாவட்டத்தில் நேற்று மேலும் 162 கொரோனாதொற்று உறுதியாகியுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 43,287 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 40,831 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று மட்டும் 542 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

1,903 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவதோடு வீடுகளிலும் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். நோய் பாதிப்புக்கு மேலும் 3 பேர் பலியாகி உள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 504 ஆக உயர்ந்துள்ளது.

மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் 1,478 படுக்கைகள் உள்ள நிலையில் 935 படுக்கைகள் காலியாக உள்ள நிலையில் 543 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிகிச்சை மையங்களில் 1,753 படுக்கைகள் உள்ள நிலையில் 249 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் 1,504 படுக்கைகள் காலியாக உள்ளன.

விருதுநகர் மீசலூர், குல்லூர்சந்தை, பாண்டியன் நகர், தர்காஸ்தெரு, ரோசல்பட்டி, ெரயில்வே பீடர் ரோடு, சூலக்கரை, பெரிய தாதம்பட்டி, லட்சுமி நகர், என்.ஜி.ஓ. காலனி, அல்லம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் நடுவப்பட்டி, கட்டங்குடி, தோப்பலாக்கரை, திருச்சுழி, கல்லூரணி, மடத்துபட்டி, மாத்தூர், மேலேந்தல், கஞ்சநாயக்கன்பட்டி, பாலையம்பட்டி, புலியூரான், புதுப்பட்டி, காரியாபட்டி, பந்தல்குடி, அச்சம் தவிர்த்தான், முகவூர், அருப்புக்கோட்டை, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, சாத்தூர், பந்தல்குடி, திருத்தங்கல் உள்ளிட்ட பகுதிகளில் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மாவட்ட பட்டியலின்படி 77 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளநிலையில் மாநிலப் பட்டியலில் 162 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிப்பு சதவீதம் 3.5 ஆக உள்ளது.

Similar News