செய்திகள்
புதுவை பா.ஜனதா அலை தமிழகத்திலும் அடிக்கும் - எல்.முருகன்
பா.ஜ.க. தமிழகத்தில் வரவே முடியாது, தாமரை மலராது என்று சொன்னார்கள். தற்போது தமிழகத்தில் 4 சட்டமன்ற உறுப்பினர்கள் வந்துள்ளனர் என எல்.முருகன் கூறியுள்ளார்.
புதுச்சேரி:
புதுவை சபாநாயகர் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழ்மண்ணில் பா.ஜ.க.வை சேர்ந்த ஒருவர் சபாநாயகராக தேர்ந்தெடுக்கபட்டுள்ளதற்கு தமிழக பா.ஜ.க. சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன்.
பா.ஜ.க. தமிழகத்தில் வரவே முடியாது, தாமரை மலராது என்று சொன்னார்கள். தற்போது தமிழகத்தில் 4 சட்டமன்ற உறுப்பினர்கள் வந்துள்ளனர். தமிழகத்தில் மிகப்பெரிய வளர்ச்சியை பா.ஜ.க. பெற்று வருகிறது.
தமிழ் மண்ணான புதுவையில் தற்போது தாமரை மலர்ந்துள்ளது.புதுவையில் வந்துள்ள பா.ஜ.க.வின் அலை தமிழகத்திலும் வரும். மதுகடைகளை மூடுவோம் என்று சொல்லித்தான் தி.மு.க. வெற்றி பெற்றது.
ஆனால் தற்போது கடைகளை திறந்துள்ளனர். கருத்துகள் சொல்பவர்கள் மீது வழக்குப்பதிவு என்பது கண்டிக்கதக்கது. அனைத்து சமுதாயத்தினரும் பல கோவில்களில் அர்ச்சகராக உள்ளனர்.
இது ஏற்கனவே உள்ள நடைமுறைதான். சிறுமிகள் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கள் என்பது தனி மனிதனின் குற்றம். இதற்காக நிர்வாகத்தை குறைகூற முடியாது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.